டெல்லியில் பிரேசில் மாணவி கற்பழிப்பு: வீட்டு உரிமையாளர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பிரேசில் மாணவியைக் கற்பழித்ததாக, அந்த மாணவி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் காமிலா. அவர் டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தார். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

காமிலா மீது வீட்டின் உரிமையாளருக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தனது இச்சையை தீர்த்துக் கொள்ள காமிலாவை தனது வீட்டுக்கு வரவழைத்து காபி கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்து இருந்ததை அறியாத காமிலா அதை குடித்ததும் மயங்கி விட்டார். இதைப் பயன்படுத்தி காமிலாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்துள்ளார். இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முறை காபி கொடுத்து கற்பழித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி மீண்டும் கற்பழிக்க முயன்றுள்ளார். இதற்கு காமிலா எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை வீட்டில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து காமிலா நொய்டா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வீட்டு உரிமையாளர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். காமிலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+