கேரள முதல்வர் அச்சுதானந்தனின் டெலிபோன் பில் ரூ.12 லட்சம்!
திருவனந்தபுரம்: கடந்த நான்கு ஆண்டுகளில் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் தொலைபேசிக்காக ரூ. 12 லட்சம் பில்லாக கட்டப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டபேரவையில் எதிர்கட்சி உறுப்பினர் சிபி முகமது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொலைபேசி செலவு குறித்த விபரங்களை கேட்டார்.
அதற்கு முதல்வர் அச்சுதானந்தன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது...
கடந்த நான்கு ஆண்டுகளில் அச்சுதானந்தன் தொலைபேசிக்காக செலவு செய்த தொகை ரூ.12.24 லட்சமாகும்.
கல்வி மற்றும் கலாச்சாரதுறை அமைச்சர் எம். ஏ. பேபி 8.28 லட்சமும், மின்சார துறை அமைச்சர் ஏ. கே. பாலன் 7.72 லட்சமும், சுகாதார துறை அமைச்சர் பி. கே. ஸ்ரீமதி 7.60 லட்சமும், உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் 7.29 லட்சமும், நீர்பாசனதுறை அமைச்சர் என். கே. பிரேமசந்திரன் 7.25 லட்சமும் செலவு செய்துள்ளனர்.
தேவசம் போர்டு அமைச்சர் கடந்தபள்ளி ராமசந்திரன் மிகவும் குறைவாக ரூ.73 ஆயிரத்து 901 செலவு செய்துள்ளார்.
செல்போனில் பேசியதில் நீர்பாசனதுறை அமைச்சர் எம். கே. பிரேமசந்திரன் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.07 லட்சம் செலவு செய்துள்ளார்.
அமைச்சர் எம். கே. பேபி 94,833 ஆயிரமும், நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் 90,724 ரூபாயும் செலவு செய்துள்ளனர் என்று அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications