அரசு அலுவலர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி ஓய்வு பெற்றார்-புதிய தலைவர் சண்முக ராஜன்
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி அரசுப் பணியிலிருந்தும், சங்கத் தலைவர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக சண்முகராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 14 வருடங்களாக சூரியமூர்த்தி சங்கத் தலைவர் பதவியில் இருந்து வந்தார். தீவிர அதிமுக அனுதாபியாக அறியப்பட்டவர் சூரியமூர்த்தி. அதற்கேற்ப கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அரசு ஊழியர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டபோது கூட அரசு ஊழியர்களுக்காக தீவிரமாக இவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போதைய திமுக அரசு பதவியேற்றதும் தனது நிலையை மாற்றிக் கொண்டார் சூரியமூர்த்தி. கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள இழந்த சலுகைகளை மீண்டும் பெற தீவிர முயற்சி மேற்கொண்டார். சமீபத்தில் சென்னையில் அரசு ஊழியர்கள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி அறிவிக்கும் பெருவிழா என்ற பெயரில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கருணாநிதி, சூரியமூர்த்தியை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நிலையில், நேற்று சூரியமூர்த்தி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய சங்கத் தலைவராக சண்முகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications