என்எல்சி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து வேலைக்குப் போகவில்லை. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதித்து, தென் மாநிலங்கல் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி முதல் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரமும், அதன் விரிவாக்க மின் நிலையத்தில் 420 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1,470 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 600 மெகாவாட்டும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. மற்ற இரு மின் நிலையங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 42 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், 43 சதவீதம் இதர தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. மீதி 15 சதவீதம் மத்திய தொகுப்புக்குப் போகிறது.
தற்போது 3 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதால், மின் உற்பத்தி இப்போதைக்கு நடக்கிறது. ஆனால் வேலைநிறுத்தம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கலாகி விடும்.
இந்த நிலையில் பிரச்சினையை தீர்த்து ஸ்டிரைக்கை முடிவுக்குக்கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை நேற்று ஜெய்ஸவாலை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜா ஒப்படைத்தார்.
கடிதத்தில், தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்கனவே நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்று ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்ஸ்வால் பேசுகையில், என்.எல்.சி. தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே மீண்டும் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்னும் 2 நாளில் சுமூகத்தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications