என்எல்சி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து வேலைக்குப் போகவில்லை. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதித்து, தென் மாநிலங்கல் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி முதல் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரமும், அதன் விரிவாக்க மின் நிலையத்தில் 420 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1,470 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 600 மெகாவாட்டும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. மற்ற இரு மின் நிலையங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 42 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், 43 சதவீதம் இதர தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. மீதி 15 சதவீதம் மத்திய தொகுப்புக்குப் போகிறது.
தற்போது 3 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதால், மின் உற்பத்தி இப்போதைக்கு நடக்கிறது. ஆனால் வேலைநிறுத்தம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கலாகி விடும்.
இந்த நிலையில் பிரச்சினையை தீர்த்து ஸ்டிரைக்கை முடிவுக்குக்கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை நேற்று ஜெய்ஸவாலை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜா ஒப்படைத்தார்.
கடிதத்தில், தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்கனவே நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்று ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்ஸ்வால் பேசுகையில், என்.எல்.சி. தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே மீண்டும் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்னும் 2 நாளில் சுமூகத்தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications