பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடமில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. இதில் தொழிற் கல்விப் பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் நிரம்பி விட்டன.
இதனால் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் கவுன்சிலிங் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விரைந்து வந்து அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications