எதிர்க்கட்சிகளின் பந்த்தில் பாமக பங்கேற்காது-டாக்டர் ராமதாஸ்
சென்னை : ஜூன் 5ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் சிபிஎம் விடுத்த அழைப்பை பாமக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..
இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் ஒரே நாளில் முழு அடைப்பு என்ற பெயரில் அழைப்பு விடுத்துள்ளது. கொள்கை மற்றும் அரசியல் நிலைமைகளில் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இரு தரப்பினரும் மக்கள் நலன் என்பதைவிட அரசியல் ஆதாயத்தையே முன்னிலைபடுத்துகிறது.
வரும் 5ஆம் தேதி நடக்க இருக்கும் வேலை நிறுத்தத்துக்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியது உண்மையில்லை.
எனவே 5ஆம் தேதி நடக்க இருக்கும் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் பாமக பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications