For Daily Alerts
Just In
பந்த்துக்கு விஜயகாந்த் ஆதரவில்லை-தேமுதிக புறக்கணிப்பு
சென்னை: நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படும் பந்த் போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
பந்த்தில் பங்கேற்க வருமாறு அதிமுககூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன. ஆனால் அதற்கு எந்தப் பதிலும் தராமல் இருந்து வந்தார் விஜயகாந்த். கடைசி நேரத்தில் அவர் பந்த்தில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் கடைசி வரை எந்தப் பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டார் விஜயகாந்த். அவர் பந்த்தை ஆதரிக்கவில்லை என்று தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. எனவே பந்த்தில் தேமுதிகவினர் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனராம்.
Story first published: Monday, July 5, 2010, 14:50 [IST]