இப்போது என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil

என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐந்து சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவர்கள் பணிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் இன்றுகாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். 2008ம் ஆண்டு டெல்லியில் வைத்துக் கையெழுத்தான ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி 24 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் குறித்து என்எல்சி நிர்வாகம் கூறுகையில், 50 சதவீத தொழிலாளர்கள்தான் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் பணிக்கு வந்துள்ளனர். எனவே ஸ்டிரைக்கால் மின் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications