அரசு மருத்துவமனைகளில் அனைத்துமே பற்றாக்குறை-ஜெ.கண்டனம்-10ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெறக் கூடிய அளவுக்கு சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய மருத்துவமனையாக சென்னை அரசு பொது மருத்துவமனை விளங்கி வந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் பெரும்பாலான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இல்லை என்றும், எலக்ட்ரோ கிரிப் பேண்டேஜ் கடந்த நான்கு ஆண்டு காலமாக வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, வெளியிலிருந்து பணம் கொடுத்து மருந்து, மாத்திரைகளை வாங்கக்கூடிய நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அரசு பொது மருத்துவமனையில் உள்ள மின் தூக்கிகளில் பெரும்பாலானவை, பல மாதங்களாக இயங்கவில்லை என்றும், இதன் காரணமாக நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இது தவிர, நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பயோ கழிவுகள் மருத்துவமனையின் பின்புறம் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மருத்துவமனையே புதிய நோய்க் கிருமிகள் உருவாகும் இடமாக மாறியுள்ளதுடன், இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறிவிட்டது.
இது மட்டுமல்லாமல், அரசு பொது மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆஞ்சியோகிராம் கருவி கடந்த ஆறு மாத காலமாக செயல்படாத நிலையில் உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், ஊழியர்களும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவு இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாததன் காரணமாக மருத்துவமனையே சுகாதாரமற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசால் வாங்கப்பட்ட 50 கணினிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன இயந்திரங்கள் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக நோயாளிகள் உயிரிழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. நோயைத் தீர்த்துக் கொள்ள மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கூடுதலாக புதிய நோய்களை பெறக்கூடிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்குத் துணையாக மருத்துவமனைக்குச் செல்பவர்களும் புதிய நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, அதிமுக சார்பில், 10.7.2010 சனிக்கிழமை அன்று சென்னை பார்க் டவுன் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications