சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு

Subscribe to Oneindia Tamil

Vodafone
மும்பை: சென்னையில் வோடபோன் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்த பெண் மும்பை நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்துமதி சுப்பிரமணியம் (40) என்ற அந்த பெண் நேற்று மும்பை அந்தேரியில் உள்ள ஐடிசி கிராண்ட் மராத்தா ஹோட்டலில் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார்.

பணி நிமித்தமாக மும்பை வந்த அவர் நீச்சல் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று மும்பை சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

நேற்று மும்பையில் கனமழை பெய்ததால் நீச்சல் குளம் மூடப்பட்டதோடு, அங்கு வழக்கமாக கண்காணிப்பில் ஈடுபடும் ஊழியர்களும் அகற்றப்பட்டிருந்தனர். மூட்டப்பட்ட நீச்சல் குளத்தில் இந்துமதி ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.
இந்த விஷயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு குறித்தும் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+