கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டது-ஊழியர்கள் திரும்பப் பெறப்பட்டனர்

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஐ.நா. அலுவலகத்தை அந் நாட்டு சிங்கள அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த முற்றுகையைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடு்க்கத் தவறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. அலுவலகத்தை மூட உத்தரவிட்டார்.
இதையடுத்து கொழும்பு ஐ.நா. அலுவலகம் நேற்றிரவு மூடப்பட்டு, ஊழியர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலுவலகத்துக்கு வெளியே புத்த பிட்சுக்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் இலங்கை வீட்டுவசதித் துறை அமைச்சர் விமல வீரவன்சா.
இந்தக் குழுவை ஐ.நா. வாபஸ் பெறுவரை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், நிபுணர் குழுவை திரும்பப் பெற முடியாது என்று ஐ.நா. ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது, இலங்கை ராணுவம் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. இதற்கு இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் விமல்:
இந் நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், ஐ.நாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தனது அமைச்சர் பதவி தடையாக இருப்பதால் ராஜிநாமா செய்வதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தை தடை செய்ய முடியாது-பெரிஸ்:
இந் நிலையில் ஐ.நாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தடை செய்ய முடியாது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications