நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கொலை வழக்கு விசாரணைக்காக நெல்லை நீதிமன்றத்தில் நேற்று 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் கடந்த 13-1-2001 அன்று சர்வோதயபுரியை சேர்ந்த கோட்டார் என்ற சின்னதுரை ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு நீதிபதி பிரபுதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக அப்போதைய திருச்செந்தூர் டி.எஸ்.பி.யும், தற்போதைய மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டருமான அங்கமுத்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதேபோல் கடந்த 1998-ம் ஆண்டு முறப்பநாட்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அப்போதைய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.யும், தற்போதைய நெல்லை டி.ஐ.ஜி.யுமான சண்முக ராஜேஸ்வரன், மதுரை டி.ஐ.ஜி மித்தேல் ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

கடம்பூரில் நிலத்தகராறில் புஷ்பவள்ளி என்ற பெண்ணை வீடு புகுந்து ஜாதி பெயர் சொல்லி முனியசாமி என்பவரும் அவரது மனைவி் முருகலட்சுமியும் அரிவாளால் வெட்டிய வழக்கு தொடர்பாக அப்போது அங்கு ஏ.எஸ்.பி.யாகவும், தற்போது ஊட்டி எஸ்.பி.யாகவும் பணியாற்றி வரும் கபில் சரத்கரும் நேற்று மாவட்ட தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அரசு வழக்கறிஞர் கலைசெல்வன் அவரிடம் விசாரணை நடத்தினார்.

ஒரே நாளில 2 டி.ஐ.ஜி.க்கள், 2 எஸ்.பி.க்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நீதிமன்ற வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+