அதிமுகவிலிருந்து மேலும் ஒரு பிரமுகர் விலகல்-கட்சி அல்ல கம்பெனி என்கிறார்!
ஈரோடு: அதிமுகவிலிருந்து குப்பன், சுப்பன் முதல் முத்துச்சாமி, சின்னச்சாமி வரை சகல தரப்பினரும் விலகி வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.
விலகியதோடு நில்லாமல், அதிமுக ஒருகட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. இப்படிப்பட்ட கம்பெனியில் இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயா பேரவை செயலாளராக இருந்தவர் சிவக்குமார். இந்த சிவக்குமார், திருச்சி சென்று அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இந்த தாவல் குறித்து அவர் கூறுகையில், அதிமுக ஒரு கம்பெனி போல செயல்படுகிறது. அது கட்சியே கிடையாது. எனக்கு கம்பெனியில் பணி புரிய விருப்பம் இல்லை. எனவேதான் நான் திமுகவுக்கு வந்து விட்டேன் என்று கூறினார்.
அதிமுகவிலிருந்து இன்னும் எத்தனை பேர் இப்படி 'வி.ஆர்.எஸ்' வாங்கிக் கொண்டு போகப் போகிறார்களோ.?












Click it and Unblock the Notifications