ஈவ் டீசிங்-ஓசூர் அருகே வகுப்பறையில் மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூர் அருகே வகுப்பறையில் பிளஸ் ஒன் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சில மாணவர்கள் தன்னைக் கேலி செய்ததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.

ஓசூர் அருகே பைரச்சத்திரத்தில் உள்ள பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று பிற்பகல், உணவு இடைவேளையின்போது அந்த மாணவி கையோடு கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக்குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தன்னை சிலர் கிண்டல் செய்து தொந்தரவு செய்து வருவதாக இந்த மாணவி ஏற்கனவே தனது பெற்றோரிடம் புகார் கூறியிருக்கிறார். எனவே ஈவ் டீசிங் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் க
கருதுகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை அறிய முயற்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+