நாகர்கோவிலில் ரூ.2 கோடி போதை பொருள் பறிமுதல்: 4 பேரிடம் விசாரணை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் 2 கோடி மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதை பொருள் சிக்கியது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போதை பொருளுடன் சிலர் நின்று கொண்டிருப்பதாக சிறப்பு போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்வலாறு அணை பகுதியை சேர்ந்த ஜெயராஜ், அம்பாசமுத்திரம் கணேசன் என்ற சுப்பிரமணி, குமரி மாவட்டம் தாடிக்காரன் கோணத்தை சேர்ந்த மைக்கேல், நெல்லை வி.கே.புரத்தை சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 1850 கிராம் கொக்கைன் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications