ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்

கடலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை குறிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்சாரம் இன்றி தொழில் உற்பத்தி பெருகிட முடியாது.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலம் பாழடிக்கப்பட்டு வருகிறது. பிறகு உண்மையான நில உரிமையாளர்களிடம் இருந்து மிரட்டி பறிக்கப்படுகிறது. பெண்களும் கடத்தப்பட்ட அவல செய்தி இந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. கடலூர் நகரத்தை சுற்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக கடலூர் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் வாழ்வதற்கு தகுதியற்றதாகிவிடும்.
ஜனநாயகத்தை மீட்போம்
தமிழ்நாடு முழுவதும் சொந்த குடியிருப்பு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கைபடி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும், நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தி உழவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த போராட்டத்தை நடத்துவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கலந்து கொள்கிறார்.
நந்தன் பாதைக்கான தடையை நீக்க வேண்டும்
அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற பாதைக்கான தடையை நீக்க வேண்டும், அந்த பாதையை திறக்க வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 15-ந் தேதி எங்கள் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications