Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

Tha Pandian
கடலூர்: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியத் தமிழர்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு பண உதவி, பொருளுதவியை அளித்து வருகிறது இந்திய அரசு. இந்தியர்கள் யாரையும் காக்கும் நிலையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் இல்லை. ராஜபக்சேவுக்கு மட்டும்தான் அவர்கள் சேவகம் செய்கிறார்கள் என்று சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்.

கடலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை குறிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்சாரம் இன்றி தொழில் உற்பத்தி பெருகிட முடியாது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலம் பாழடிக்கப்பட்டு வருகிறது. பிறகு உண்மையான நில உரிமையாளர்களிடம் இருந்து மிரட்டி பறிக்கப்படுகிறது. பெண்களும் கடத்தப்பட்ட அவல செய்தி இந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. கடலூர் நகரத்தை சுற்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக கடலூர் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் வாழ்வதற்கு தகுதியற்றதாகிவிடும்.

ஜனநாயகத்தை மீட்போம்

தமிழ்நாடு முழுவதும் சொந்த குடியிருப்பு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கைபடி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும், நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தி உழவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த போராட்டத்தை நடத்துவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கலந்து கொள்கிறார்.

நந்தன் பாதைக்கான தடையை நீக்க வேண்டும்

அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற பாதைக்கான தடையை நீக்க வேண்டும், அந்த பாதையை திறக்க வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 15-ந் தேதி எங்கள் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+