ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்

கடலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை குறிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்சாரம் இன்றி தொழில் உற்பத்தி பெருகிட முடியாது.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலம் பாழடிக்கப்பட்டு வருகிறது. பிறகு உண்மையான நில உரிமையாளர்களிடம் இருந்து மிரட்டி பறிக்கப்படுகிறது. பெண்களும் கடத்தப்பட்ட அவல செய்தி இந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. கடலூர் நகரத்தை சுற்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக கடலூர் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் வாழ்வதற்கு தகுதியற்றதாகிவிடும்.
ஜனநாயகத்தை மீட்போம்
தமிழ்நாடு முழுவதும் சொந்த குடியிருப்பு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கைபடி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும், நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தி உழவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த போராட்டத்தை நடத்துவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கலந்து கொள்கிறார்.
நந்தன் பாதைக்கான தடையை நீக்க வேண்டும்
அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற பாதைக்கான தடையை நீக்க வேண்டும், அந்த பாதையை திறக்க வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 15-ந் தேதி எங்கள் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல்












Click it and Unblock the Notifications