For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 வீரர்களை சுட்டுக் கொன்றார் சிஆர்பிஎப் வீரர்-அவரும் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

Jharkhand Map
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா மாவட்டத்தில் சக வீரர்கள் ஆறு பேரை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎப் வீரரை மற்ற வீரர்கள் சேர்ந்து சுட்டுக் கொன்றனர்.

சம்பந்தப்பட்ட வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை சரமாரியாக அவர் சுட்டுத்தள்ளினார். இதில் ஒரு உதவி கமாண்டர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவரை சக வீரர்கள் சேர்ந்து சுட்டுக் கொன்றனர்.

அந்த வீரரின் பெயர் ஹர்பீந்தர் சிங். சிஆர்பிஎப்பின் 196வது பட்டாலியனைச் சேர்ந்தவர். சிஆர்பிஎப் முகாமில் சென்ட்ரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஹர்பீந்தர் சிங் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X