தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டும்-வாசன்
சென்னை: இலங்கை கடற்படையால் மீனவர்கள் கொல்லப்படுவதை ஒரு முடிவிற்கு கொண்டு வர மத்திய மற்றும் தமிழ் நாடு அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கடல்போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால், அதிகாரிகளால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நேரங்களில் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. தமிழக அரசும் மத்திய அரசும் வருகிற நாட்களில் இணைந்து செயல்பட்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுதியோடு முற்றுப்புள்ளி வைக்கும்.
மத்திய அரசு இதற்குண்டான நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொண்டு, இது போன்ற நிலை மீனவர்களுக்கு வருகிற நாட்களில் ஏற்படாத வண்ணம் செயல்பட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். இது குறித்து தமிழக காங்கிரஸ் இயக்கமும் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications