குற்றாலம் வந்த கார் ஆற்றில் கவிழ்ந்தது-2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குற்றாலத்திற்கு வந்த கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்தனர்.

குற்றாலம், ஐந்தருவியில் சாரல் மழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டுகிறது. சீசன் களை கட்டியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 5 பேர் கொண்ட குழு கார் மூலம் குற்றாலம் வந்து கொண்டிருந்தனர். தென்காசியை அடுத்த வேட்டைக்காரன்குளம் அருகே அமுதகண்ணீர் ஆற்றின் வளைவில் கார் திரும்பும்போது தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார் உரிமையாளர் ஜேபஸ், டிரைவர் சுரேந்தர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சேர்மராஜ், ஜேக்கப், ராமராஜ், ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+