ஆஸ்திரேலியாவில் மீண்டும் அட்டகாசம்-2 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்-ஒருவரால் பேச முடியவில்லை

அதேபோல இன்னொரு இந்திய மாணவரும் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
மிகவும் அபாயகரமான நிலையில் கடும் காயங்களுடன் அந்த இந்தியர் மெல்போர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் பரத் தாபர். மெல்போர்ன்ஸ் கல்லூரியில் தற்போதுதான் படிப்பை முடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் தனது சொந்த மாநிலமான ஹரியானாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவுஆறு பேர் கொண்ட கும்பல் மெல்போர்ன் வீதியில் ஒரு இந்தியரைத் தாக்கியதைப் பார்த்து அங்கு ஓடினார் பரத் தாபர். அந்தக் கும்பலை விலக்கி விட முயன்றபோது அவர்கள் தாபரையும் தாக்கத் தொடங்கினர். மிகக் கொடூரமாக தாக்கியதில் தாபரின் வாய் பெரும் சேதமடைந்தது. முகத்திலும் பெரும் காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு இந்தியர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் பரத் தாபரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவரால் சில வாரங்களுக்கு வாயைத் திறக்கவோ, பேசவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பரத்தான் சண்டைக்குக் காரணம் என ஆஸ்திரேலிய போலீஸார் வழக்கை திசை திருப்ப முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications