சீமானுக்கு முதல் வகுப்பு வசதிகளே தரப்பட்டுள்ளன-தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானுக்கு வேலூர் சிறையில் முதல் வகுப்பு வசதிகளே தரப்பட்டுள்ளன. தனிமைச் சிறையில் அவர் அடைக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
சீமானை தனிமைச்சிறையில் அடைக்கவில்லை. முதல்வகுப்பிற்கு உரிய அனைத்து சலுகைகளும் சீமானுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீமான் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறிய நீதிபதிகள், ஒரு வார அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications