ரூ. 10,000 கோடி சத்யம் நிறுவன மோசடி-ராமலிங்க ராஜுவின் சகோதரர் ஜாமீனில் விடுதலை

அதே போல அந்த நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரி வட்லாமணி ஸ்ரீனிவாஸ் முன்னாள் ஊழியர்களான ராமகிருஷ்ணா, வேங்கடபதி ராஜூ, ஸ்ரீசைலம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ராஜ இளங்கோ தனது தீர்ப்பில், இந்த வழக்கு விசாரணை இப்போதைக்குத் தொடங்க வாய்ப்பில்லை. அதுவரை இவர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் இந்த 5 பேரும் தினமும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த மோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டபோதும், அங்கு ஆஜராகாமல் உடல் நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையிலேயே பெரும்பாலான தினத்தை ஏ.சி. ரூமில் மகி்ழ்ச்சியாக கழித்து வருகிறார் ராமலிங்க ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஹெபாடிடிஸ் சி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவரும் இந்த 5 பேரும் கைதாகி ஓராண்டு முடிந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவன ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் தள்ளூருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியிலேயே ஜாமீன் வழங்கிவிட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications