For Daily Alerts
Just In
பாக். பழங்குடிகள் கோஷ்டி மோதல்: இடையில் சிக்கிய 7 இந்துக்கள் சுட்டு கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இரு பழங்குடி பிரிவினருக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையி்ல் இடையில் சிக்கி இந்து தம்பதியும் அவர்களது 5 குழந்தைகளும் பலியாயினர்.
ஜாபர்பாத் மாவட்டத்தில் சுபாத்பூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இப் பகுதியைச் சேர்ந்த புக்தி பழங்குடி இனத்தினரில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் இரு தரப்பினரும் கண்மூடித்தனமாக சுட்டதில் நடுவில் சிக்கி இவர்கள் பலியாயினர்.
இந்த இந்துத் தம்பதியும் அவர்களது 5 குழந்தைகளும் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது பழங்குடியினர் கும்பல் மோதலில் ஈடுபட்டது. இதில் இவர்கள் மீது குண்டுகள் பாய்ந்தன.
மதில் சுவர் கட்டுவது தொடர்பாக இந்த மோதல் நடந்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Comments
Story first published: Thursday, July 22, 2010, 14:50 [IST]