தமிழக-கேரள எல்லையில் 8 மணி நேரம் போக்குவரத்து பாதி்ப்பு : பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செங்கோட்டை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. நேற்று இரவு மதுரையில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரளாவை நோக்கி சென்றது.

ஆரியங்காவு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென லாரி பழுதானது. டிரைவர் முயற்சி செய்தபோதும் லாரியை பாலத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. லாரி அங்கேயே நின்று விட்டது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்களும் பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டன. நீ்ண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

நள்ளிரவு 1 மணியில் இருந்து இன்று காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலை 8 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் சென்றன. கேரளாவிற்கு செல்லும் மலை பாதையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. இவற்றில் 5 பாலங்கள் குறுகிய பாலங்கள் ஆகும். நேற்று நள்ளிரவு லாரி சிக்கியது குறுகிய பாலம் என்பதால் லாரியை அகற்ற முடியாமல் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+