ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்-4 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

Rameswaram
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜூலை 17ம் தேதி ஒரு படகு காணாமல் போனது. இதையடுத்து 20 பேர் கொண்ட மீனவர்கள் குழு அந்தப் படகை தேடி கடலுக்குள் சென்றது. தனுஷ்கோடி அருகே காணாமல் போன படகு மிதப்பதைப் பார்த்து அதை தங்களது படகுடன் இணைத்து கரைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் நான்கு பேர் இருந்த படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியது போதாது என்று இப்போது இலங்கை மீனவர்களும் சேர்ந்து தாக்க ஆரம்பித்திருப்பது தமிழக மீனவர்களின் நிலையை மிகவும் மோசமாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+