போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் 8 இடங்களில் சுரங்கப் பாதை
சென்னை: சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லக் கூட அதிக நேரம் ஆகிறது. வாகனங்களில் செல்பவர்கள் பாடு இப்படி என்றால், கால் நடையாக செல்லும் மக்களின் பாடை சொல்லவே வேண்டியது இல்லை.
போக்குவரத்து மிகுந்த காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.
சென்னை நகரில் அண்ணாசாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சுரங்கப்பாதை உள்ளது. தற்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மேலும் 8 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி நூறு அடி ரோடு அண்ணா நகர் மேற்கு எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலயம் எதிரே உள்ள ரோடு, எம்.எம்.டி.ஏ. சந்திப்பு, அசோக் பில்லர் போலீஸ் பயிற்சி கல்லூரி, உதயம் தியேட்டர், காசி தியேட்டர், ஈகாட்டு தாங்கல், கிண்டி தொழில் பேட்டை ஆகிய 8 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் இருந்து அசோக்பில்லர் வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது முடிவடைந்த பிறகு சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications