For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி என்கெளண்டர்: சிபிஐயால் தேடப்படும் குஜராத் அமைச்சர் அமித் ஷா ராஜினாமா

By Chakra
Google Oneindia Tamil News

Amitshah and Modi
அகமதாபாத்: சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரை போலி என்கெளண்ட்டரில் கொலை செய்ததாக சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தக் கொலைகளுக்கு சாட்சியான பிரஜாபதியையும் அமித் ஷா போலீசாரை வைத்து போலி என்கெளண்டர் நடத்தி கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மன்களையடுத்து அமித் ஷா தலைமறைவானார். இதையடுத்து அவரைக் கைது செய்ய சிபிஐ தனிப் படைகளை அமைத்தது. அவரது அரசு அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.

இந் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் நரேந்திர மோடியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

நரேந்திர மோடியின் வலது கரமான இவர் மீது ஆள் கடத்தல், கொலைகள், கொலைச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது. அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுக பாஜக- அமித் ஷா தரப்பு முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X