பதவி விலகிய பயிற்சியாளர் கெளசிக்குடன் கள்ளக்காதலா-முன்னாள் மேனேஜர் மறுப்பு

பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து உடனடியாக பசவராஜ் நீக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு இருப்பதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சர்ச்சை முடியும் வரை பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று கூறி விலகி விட்டார் கெளசிக். இந்த நிலையில் கெளசிக்கிடம் உதவிப் பயிற்சியாளராக இருந்தவரும், இந்திய ஹாக்கி அணியின் மேனேஜருமான அனுரீட்டா சைனிக்கும், கெளசிக்குக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. ஆனால் சைனி அதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் அபாண்டமான புகார். இந்தப் புகாரைக் கூறிய வீராங்கனைகள் மீது நான் வழக்கு தொடரப் போகிறேன்.
நானும், கெளசிக்கும் தொழில் ரீதியிலான உறவையே கொண்டிருந்தோம். பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர் என்ற அளவைத் தாண்டி நாங்கள் போனதில்லை. இந்திய மகளிர் ஹாக்கியின் உயர்வுக்காக பாடுபட்டோம்.
அப்படிப்பட்ட எங்களை அவமானப்படுத்தியுள்ளனர். இது மிகப் பெரிய அவதூறு, கெளசிக் விலக்கப்பட்ட விதம் மிகவும் மோசமானது என்று கூறியுள்ளார் அனுரீட்டா.












Click it and Unblock the Notifications