பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணி பெண் நெல்லை மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான ஐகிரவுண்ட் மருத்துவமனையில் பலர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி வனஜா, கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனஜாவுக்கும், சுரேஷ்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் வனஜா கணவருடன் திருப்பூரில் வசித்து வந்தார். தற்போது கர்ப்பமாக உள்ள அவர் பிரவசத்திற்காக சொந்த ஊரான காடுவெட்டிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+