தாட்கோ திட்டம் அறிய கட்டணமில்லா தொலைபேசி அறிமுகம்
புளியங்குடி: தமிழகத்தில் ஆதி திராவிடர் மக்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தாட்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய ஆதி திராவிட மக்கள் சுய தொழில் செய்யவும், இதர சேவைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 25 5544-ஐ அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த தொலைபேசியில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தாட்கோ திட்டங்கள் தொடர்பான முழு விவரங்களை எவ்வித கட்டணமு்ம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த கட்டணம் இல்லா தொலைபேசி அறிமுக விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை முதன்மை செயலர் விஸ்வநாத் ஷெக்காவ்கர், தாட்கோ மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.