போலி மதிப்பெண் சான்றிதழ்-ஏகாம்பரம் சஸ்பெண்ட்
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் சிக்கிய கல்லூரிக் கல்வித்துறை ரெக்கார்ட் கிளார்க் அப்பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலி பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழை விற்பனை செய்து ஏகாம்பரமும், ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடமும் கைதானார்கள். இவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில் ஏகாம்பரத்தை தற்போது 3 நாள் காவலில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வரதப்பன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் ஏகாம்பரம் வசித்து வருகிறார்.அவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் கல்லூரியில் படிக்கிறார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
ஏகாம்பரத்தின் வீட்டில் நேற்று மாலை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தற்போது ஏகாம்பரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ள்ளார்.
ஏகாம்பரத்திடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கிளண்டன், வேலூரைச் சேர்ந்த வேலு ஆகிய கூட்டாளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர்களைக் கைது செய்ய போலீஸார் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
ஆனால் வேலு சிக்கவில்லை. அவரது முகவரியும் போலி எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விரைவில் கிளண்டன் கைது செய்யப்படவுள்ளார்.
ஏகாம்பரத்திற்கு பக்கவாதமும், இருதய நோயும் உள்ளதாம். இதற்கான சிகிச்சைக்குப் பணம் போதவில்லை என்பதால்தான் போலி சான்றிதழ் மோசடியில் இறங்கியுள்ளார்.
ஒரு சான்றிதழுக்கு ரூ.5 ஆயிரம் வரை அவருக்கு பணம் கிடைத்துள்ளது. 4 வருடமாக இந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்.