நல்லா மழை பெய்யனும்.. காமன்வெல்த் போட்டி 'பிளாப்' ஆகனும்-அய்யர் வேண்டுதல்

ஊரக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மணி. முன்பு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அய்யர்,
காமன்வெல்த் போட்டிகளுக்கு மழையால் இடையூறு ஏற்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உண்மையைச் சொன்னால், இந்த காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், அடுத்தடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று வரிசையாக இந்தியாவில் நடத்தத் துடிப்பார்கள்.
இந்தியா போன்ற ஒரு நாடு விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது மிகவும் வீணான செயல்.
டெல்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ.35,000 கோடி செலவிடப்படுகிறது. இந்தப் பணம் வசதியற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன் மத்திய அரசு, ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றார் மணி.
மணி சங்கர அய்யரின் இந்தக் கருத்துக்கு அவரது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மணி சங்கரின் கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மணி சங்கர அய்யரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பாஜக கூறியுள்ளது.
இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவது நாட்டின் கெளரவப் பிரச்சனை என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை அய்யர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
தேசவிரோத பேச்சு-காங்கிரஸ் கடும் கண்டனம்:
மணிசங்கர் அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அய்யரின் கருத்து முழுக்க, முழுக்க பொறுப்பற்றது, அபத்தமானது. மூத்த தலைவர், விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகித்தவர் இப்படிப் பேசலாமா? இந்தியர் யாரும் இப்படிப் பேசமாட்டார்கள்.
விளையாட்டுத் துறையை அவரிடமிருந்து பறித்த விரக்தியில் இவ்வாறு பேசுகிறார். அவர் விளையாட்டு அமைச்சராக இருந்திருந்தால் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவுக்கே வந்திருக்காது என்றார் கல்மாதி.
ஆனால், ரூ. 35,000 கோடியைக் கொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தி தான் இந்தியாவுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகள் மரியாதையை வாங்கித் தரப் போகிறார்களா?.
நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications