வறுமைக் கோட்டுக்கு மேல்உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கூடாது-சுப்ரீம் கோர்ட் யோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

பொது வினியோக திட்டத்தில் ஏராளமான ஊழல் நடைபெறுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

Ration Food

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,, ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கு மானிய விலையில் தானியங்கள் வழங்குவதை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

அப்படி கைவிட்டால், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு நிறைய தானியங்கள் கிடைக்கும். தானிய கிடங்குகளில் அழுகி வீணாகும் தானியங்களை, பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

இந்த யோசனை குறித்து 6 வாரங்களுக்குள் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் பராசரனை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+