For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசைப்படகு வாட்ச்மேன் கடலில் மாயம்-விசைப்படகுகள் நிறுத்தம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு வாட்ச்மேன் திடீரென மாயமானதால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. அவர் கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தேடும் பணி நடக்கிறது.

தூத்துக்குடி லயன் டவுணை சேர்ந்தவர் ரிசசர்டு. இவர் தனக்கு சொந்தமான விசைப்படகை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்தார். இந்த படகில் வாட்ச்மேனாக தூத்துக்குடி கோயில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பி்ச்சையா இருந்தார். நேற்றிரவில் இருந்து இவரை காணவில்லை.

அவருடைய செருப்பு படகில் இருந்தது. பைக் மீன்பிடி துறைமுகத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவர் படகில் இருந்து கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகித்த மீ்ன்பிடி தொழிலாளர்கள், அவரது உறவினர்கள் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன்துறை அதிகாரிகளும் சங்கு தொழிலாளர்களை தேடும் பணியி்ல் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசைப் படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X