For Daily Alerts
Just In
சென்னையில் இரவில் பெய்த திடீர் மழையால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் நேற்று இரவு திடீரென பெய்த பலத்த மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 17 விமானங்கள் தாமதமாகின.
சென்னையில் நேற்று பகலில் சரியான வெயில் அடித்தது. மறுபடியும் வெயில் விளையாடுகிறதே என்று மக்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாலையில் காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சாதாரண மழையாக இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே பலத்த மழையாக இருந்தது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கி விட்டது. புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த மழை. நகருக்குள் அவ்வளவாக இல்லை.
இந்த திடீர் பலத்த மழையால், சென்னையிலிருந்து டெல்லி, ஹைதராபாத், மதுரை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 17 விமானங்கள் தாமதமாகின.
இன்று காலையிலிருந்து மறுபடியும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
Comments
Story first published: Friday, July 30, 2010, 11:17 [IST]