யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் அமைக்க மத்திய அமைச்ரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித்தீர்வை ஏற்படுத்த இந்தியா முயன்று வருகிறது. தற்போது தமிழர் தாயகத்தில் ஒரு துணைத் தூதரகதத்தை ஏற்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை இந்தியா அமைக்கிறது.
இதற்கு சமீபத்தில் கொள்கை அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை அமைக்க ஒப்புதல் தரபப்ட்டது.
இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, எஸ்.எம். கிருஷ்ணா, ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமையும் துணைத் தூதரகத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு மேலும் சிறப்பாக உதவ முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.