தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றம்!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.50 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
அதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்,
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 5 மணிக்கும்,
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு பதிலாக 10.20 மணிக்கும் திருச்சியிலிருந்து புறப்படும்.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்டு 5ம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 6ம் தேதி முதல் ரயில் 7.40 மணிக்குப் பதிலாக மாலை 5 மணிக்கு அந்த ஊரில் இருந்து புறப்படும்.
அதே போல மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.30 மணிக்கு வர வேண்டிய ரயில் காலை 5.10 மணிக்கும்,
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 6 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு காலை 6.15 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் 6.35 மணிக்கும்,
ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூருக்கு காலை 6.40 மணிக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.25 மணிக்கும், மதுரையில் இருந்து எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 7.20 மணிக்கும்,
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.10 மணிக்கு வரவேண்டிய மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.30 மணிக்கும் வந்து சேரும்.
இதே போல எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 9 மணிக்குப் பதிலாக காலை 8.15 மணிக்கு சென்று சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 8.50 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கும்,
எழும்பூரில் இருந்து காலை 6.45 மணிக்கு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் காலை 11.45 மணிக்கும் வந்து சேரும்.
இதில் நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7ம் தேதி முதலும், மதுரை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 6ம் தேதி முதலும், மற்ற ரயில்கள் 2ம் தேதி முதலும் நேரம் மாற்றப்பட்ட அட்டவணைபடி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications