விரைவில் சிறப்புத் தூதர் இலங்கை செல்வார்-ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

P Chidambaram
சென்னை: இலங்ககைக்கு இன்னும் சில நாட்களில் சிறப்புத் தூதர் அனுப்பபடுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இன்று சென்னை வந்த ப.சிதம்பரம் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்தும், அவர்களின் மறு வாழ்வுக்காக மத்திய அரசு எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்.

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி வருவதையும் முதல்வரிடம் விவரித்தேன்.

இலங்கைக்கு விரைவில் சிறப்புத் தூதரை அனுப்பவுள்ளோம். அப்போது தமிழர் மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுன் பேசப்படும் என்றார்.

மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையிலான உறவு சுமூகமாகவே உள்ளது. அதனால்தான் பிற கட்சிகளைச் சேர்ந்த பலரும் காங்கிரஸில் வந்து இணைந்து கொண்டுள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+