சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
சென்னை : சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற 51 வகையான நோய்களுக்கு உயர் சிகிச்சைகள் தேவைப்படும் ஏழை-எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் காத்திருக்காமல் உடனடியாக உயர் சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' அறிவிக்கப்பட்டு, 23.7.2009 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்குக் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் உறுப்பினர்களுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துகிறது. இந்த திட்டத்தில் 29.7.2010 வரை 1,59,118 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சிகிச்சைக்காக 429 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதியை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.
தற்பொழுது ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்கு குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் கிராம முன்சீப்கள், விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போன்ற அரசு பொது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.
மேற்கண்ட நபர்களும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உயர் சிகிச்சைகள் பெற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அடையாள அட்டைகள் பெறலாம். இந்த பணிக்காக இம் மையங்கள் 1.8.2010 முதல் 30.9.2010 வரை கூடுதல் கணினி வசதியுடன் செயல்படும்.
அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதிய அட்டையுடனும், பொது நிறுவனங்களில் பணிபுரிவோர், அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளுடன், வருமான சான்றிதழ், குடும்ப அட்டையின் நகலுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடையாள அட்டை பெறுவதற்குள் வேறு ஏதேனும் சிகிச்சை தேவைப்பட்டால், ஓய்வூதிய அட்டையையும், பொது நிறுவனங்களில் பணிபுரிவோர் அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வருமான சான்றிதழ் (ஊதிய சான்றிதழ்) மற்றும் குடும்ப அட்டையின் நகலை சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications