பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப் பெருந்தகை காங்.கில் இணைந்தார்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகளிலிருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக செயல்பட்டு பின்னர் அதிலிருந்தும் நீக்கப்பட்ட செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களோடு இன்று காங்கிரஸில் இணைந்தார்.
ப.சிதம்பரம், தங்கபாலு முன்னிலையில் செல்வம் காங்கிரஸில் இணைந்தார். சத்தியமூர்த்தி பவனில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய ப.சிதம்பரம், தலித்துகளின் ஆதரவிருந்தால்தான் தேசிய அளவில் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் பிரதான கட்சியாக உருவெடுக்க முடியும்.
இந்தியாவை வலிமையுள்ள நாடாக உருவாக்க தலித்துகளின் ஆதரவு தேவை. அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸில் இருந்தபோது மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.
தமிழக காங்கிரஸில் முதல் தலித் தலைவராக கக்கன் பதவி வகித்துள்ளார். எதிர்காலத்திலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸாரை வழி நடத்துவர் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications