தமிழக நதிகளை இணைக்க ரூ.600 கோடியில் திட்டம்!

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிக்குத் தேவைப்படும் நிலத்தை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு அளித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்கும் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்குக் தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும்.
மேலும் செய்யாறு-பாலாறு நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தப் பணியைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.
இந்த மூன்று திட்டங்களும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.600 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடிவைடைய 5 ஆண்டுகளாகும்.
இந்த நதிகளை இணைத்த பின் பிற நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அந்தப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும்.
மொத்தத்தில் நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவடைய 8 அல்லது 9 ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications