அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடி: மாஜிஸ்திரேட் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

பத்தனம்திட்டா: அதிகாரத்தை பயன்படுத்தி வங்கியி்ல் இருந்து கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் பத்தனம்திட்டா மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

பத்தினம்திட்டா மாவட்ட குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் வி.ஜெயக்குமார். இவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது தனது பதவியை பயன்படுத்தி ஒரு வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு அவர் முறையாக கடனை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் மீது உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவும் விசாரித்து வந்தது. இதற்கிடையே கடந்த மாதம் இவர் பத்தனம்திட்டா மாவட்ட குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் விசாரணையில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று மாஜிஸ்திரேட் ஜெயகுமாரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+