பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்துகளை வெளிசந்தையில் விற்க தமிழக அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

புளியங்குடி: வெளிச் சந்தையில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்துகளை விற்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தமிழக அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அங்கிருந்து தமிழகம் வருவோர் மூலம் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க எல்லையோர பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன.

அம்மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் இக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கட்டுபாட்டு அதிகாரி பன்றி காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்தை தயாரித்து விற்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பேரில் வாக்ஷி ப்ளூ எஸ் மற்றும் நாசோ வாக் என்னும் தடுப்பூசி மருந்துகள் பொதுசந்தையில் விற்க உள்ளன.

இந்த மருத்துகளை பன்றி காய்ச்சல் வராமல் இருக்க மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+