நெல்லை அண்ணா பல்கலை. முதல் பட்டமளிப்பு விழா: உரையாற்றும் ஸ்டாலின்
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா வரும் 7-ம் தேதி மாலை நடக்கிறது. இதில் 1040 பேர் பட்டம் பெறுகின்றனர். விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் குமரி, தூத்துக்குடி பொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2007-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா வரும் 7-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். விழாவில் 1040 பேர் பட்டம் பெறுகின்றனர்.
இதில் 547 பேர் ஆண்கள், 493 பேர் பெண்கள். விழாவில் நேரடியாக 152 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 80 பேர் ஆண்கள், 72 பேர் பெண்கள். இவர்களில் 52 பேர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர்கள்.
பட்டம் பெறுபவர்கள் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 76 பொறியியல் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், இசிஇ, இஇஇ, எம்டெக், பயோடெக்னாலஜி, எம்.பி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளில் படித்தவர்கள்.
மேலும் பொறியியல் கல்லூரி வாளகத்தில் ரூ.7.44 கோடியி்ல் அமைக்கப்படும் நெல்லை அண்ணா பல்கலைக்கழக புதிய நிர்வாக கட்டிடம், நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் அருகே 25 ஏக்கர் பரப்பரளவில் ரூ.19.50 கோடியில் அமைக்கப்படும் நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பின்புறம் 25 ஏக்கரில் ரூ.19.50 கோடியில் அமைக்கப்படும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றிக்கும் துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications