தூத்துக்குடி துறைமுகத்தில் கம்யூட்டர் கழிவுகள் பறிமுதல்: அதிகாரிகள் மீட்பு
தூத்துக்குடி: துபாய், மாலத்தீவு நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கதிர்வீச்சு தன்மை கொண்ட எலக்ட்ரானிக் கழிவுகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கன்டெய்னர்களின் ஆவணங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் துபாயில் உள்ள அஜ்மான் என்ற இடத்தில் இருந்த கேரள மாநிலம் கலூரைச் சேர்ந்த ஆரோ வெண்ட் என்ற நிறுவனத்திற்கு வந்த கன்டெய்னரில் பயன்படுத்த முடியாத கம்யூட்டர் மானிட்டர் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவை கதிர்வீச்சு தன்மை கொண்டது என தெரிய வந்தது.
மேலும், மாலத்தீவில் இருந்து கோவை அம்பாள் டிரேடர் என்ற நிறுவனத்திற்கு வந்த மற்றொரு கன்டெய்னரின் ஆவணங்களில் இரும்புக் கழிவுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை போட்டனர். அப்போது அதில் யூ.பி.எஸ்., இன்வெர்டர், ஜெனரேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நிக்கல் கேட்னியத்தாலான 133 பழைய பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று துபாயில் இருந்து கேரள மாநிலம் கோட்டையம் கீழ்காட்டில் என்ற மில்லுக்கு வந்த கன்டெய்னரை சோதனையிட்டதில் அதில் தடைவிதிக்கப்பட்ட 148 கேட்னியம் பேட்டரிகள் இருந்தன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications