ஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது குற்றசாட்டு
இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உலகப் புகழ் பெற்ற பாகிஸ்தான் ஓவியரின் ஓவியங்களைத் திருட உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறைந்த ஓவியர் லைலா ஷாஸதாவின் மகள் ஷாஹின். இவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அதிபர் சர்தாரி மீது திருட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு ஜர்தாரி ஷாஹினின் சகோதரருடன் சேர்ந்து அவர் கராச்சி இல்லத்தில் இருந்த அவர் அன்னையின் 93 ஓவியங்களைத் திருடி, லண்டனுக்கு கப்பலில் கொண்டு சென்றதாக புகார் கூறியுள்ளார்.
சர்தாரி தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு ஷாஹின் லண்டன் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஓவியங்களை ஷாஹினின் சகோதரர் சோகைல் ஷாஸதாவுக்காக பாதுகாத்து வருவதாக சர்தாரி முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த குற்றசாட்டை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.