பிரபாகரனுக்காக கடவுளைத் தூக்கி எறிந்த ஐபிஎஸ் அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

Prabhakaran
புதுக்கோட்டை: பிரபாகரன் இறந்து விட்டார் என்ற தகவல் கேட்டதும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி தனது வீட்டில் இருந்த வெங்கடாசலபதி படத்தைத் தூக்கி எறிந்தார் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் திருச்சி வேலுச்சாமி.

சீமான் கைதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருச்சி வேலுச்சாமி பேசும்போது, "இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டி உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானதுகண்டு அதிர்ச்சியடைந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நேரே வீட்டுக்குச்சென்று பூஜை அறையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தை தூக்கிப்போட்டு உடைத்தார்.

அவர் மனைவி கேட்டபோது, தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றாத இந்தச் சாமி எனக்கு இனி தேவையேயில்லை என்று பதில் சொன்னார்.

நம் காவல் தெய்வம் வருமா?வராதா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு நடிகரின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. 'வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்...'!

சாதி,இனத்தின் பேரில் கலவரத்தை தூண்டுகிறார் என்றுதான் சீமான் மீது வழக்கு. இங்கே சிங்களனும் இல்லை. சிங்களமும் இல்லை. இந்தியாவில் இல்லாத அவனைப்பற்றி பேசினால் எப்படி கலவரம் மூளும்.

இந்தியாவிலேயே இருக்கும் இந்தியை எதிர்த்து பேசியவர்களுக்கு எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுவது?" என்று கேள்வி எழுப்பினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+