3 பள்ளி மாணவர்களை காணவில்லை: பெற்றோர்கள் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேரை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி டவுனில் உள்ள புது டவுனைச் சேர்ந்த பீர் முஹமது, பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ், ஆலங்காயம் புதிய கொல்ல தெருவைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய 3 பேரையும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை

16 வயதாகும் இவர்கள் 3 பேரும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த 3 பேரும் பெற்றோர்களிடம் வெளியே செல்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். போனவர்கள் போனவர்கள் தான், இன்னும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பீர் முஹமதின் தந்தை அயூப் கான் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+