தீவிரவாதிகளுடன் எஸ்.பி.க்கு தொடர்பு: விசாரிக்க என்.ஐ.ஏ.க்கு உத்தரவு
திருவனந்தபுரம்: தீவிரவாத இயக்கங்களுடன் எஸ்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கொச்சி சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நீதிமன்றதிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடித்ததில் கேரளாவில் பல உயர் போலீ்ஸ் அதிகாரிகள் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். இதில் எஸ்.பி. ஒருவரும் அடக்கம்.
கண்ணூர் எடக்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது. அப்போது குறிப்பிட்ட அந்த எஸ்.பி. நேரடியாக அந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும் போதும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. ஆனால் அந்த எஸ்.பி.யிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை விட்டு விட்டனர்.
இது தவிர வாகமன் பகுதியில் நடந்த சிமி இயக்கத்தின் ஆயுத பயிற்சி முகாம், எர்ணாகுளம் பாணாய்குளத்தில் நடந்த தீவிரவாத கூட்டத்தின் ரகசிய கூட்டம் ஆகிய சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு கொச்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.











Click it and Unblock the Notifications