நில விவகாரம்: திருமாவளவன் தாயார் புகாரை பதிவு செய்ய போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நில விவகாரம் தொடர்பாக திருமாவளவனின் தாயார் கொடுத்தள்ள புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
சென்னை வடபழனி 100 அடி சாலையில் எனக்கு சொந்தமான சுமார் 3 கிரவுண்ட் நிலம் இருந்தது. இதை மீனம்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனிடம் இருந்து 2006ம் ஆண்டு முறைப்படி வாங்கினேன். ஆனால் மைலாப்பூரில் வசிக்கும் பத்மநாபமூர்த்தி மற்றும் ஆந்திராவை சேர்ந்த ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் போலி ஆவணம் தயார் செய்து எனது சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது போலி ஆவண மோசடியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன்.
ஆனால் என் புகாரை பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், பெரியம்மாள் தந்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications